Wednesday, May 18, 2011

Real Fact About Social Networks

எச்சரிக்கை: பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்
நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பா...ர்த்தால் எவ்வாறு இருக்கும்.
பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங் தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது. லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.

இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விடயமாகும். "உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும்" என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே.

பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும் அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்

Thursday, October 21, 2010

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.

நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை! வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!

தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.

முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

Thursday, November 5, 2009

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன். கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சென்ற ஈகைத் திருநாள் அன்று பெருநாள் தொழுகைக்காக குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கலிமா (இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான பிரமாண வாக்குமூலத்தை) மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

வில்மிங்டனில் உள்ள புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயத்தின் கல்வி குழு தலைவராக ஒபிரைன் சேவையாற்றி வந்தார். தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கே ஆச்சரியம் தரக் கூடிய செயலாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கு மனநிம்மதியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை நோக்கிய தனது பயணம் நவம்பர் 26 அன்று இரவு தாஜ் மகால் ஒட்டலின் அறை எண் 343ல் இருந்து தொடங்கியதாக ஒபிரைன் தெரிவித்தார். தானும் தனது நண்பர் ரிச் திபந்தபரும் இரவு உணவை முடித்துக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்படாமல் தமது அறைகளுக்கு திரும்பிய சற்று நேரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டதாக ஒபிரைன் கூறினார். தனது அறைக் கதவு வழியாக பார்த்த போது துப்பாக்கி ஏந்திய மூவர் சப்தமிட்டு கொண்டு செல்வதை தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் வியட்னாம் போரில் பங்குக் கொண்ட அனுபவம் உள்ள ஒபிரைன் அறையை விட்டு வெளியே வந்து துப்பாக்கி ஏந்தியவர்களை வீழ்த்தி ஆயுதங்களை பறிக்கலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் பிறகு தனது சிந்தனையை மாற்றிக் கொண்டு கதவை தாழித்துக் கொண்டதாகவும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

பிறகு தனது அறை புகைமூட்டமாகியதாகவும் அறையை விட்டு வெளியேற எண்ணி கதவை திறந்த போது தீ எரிவதை தான் கண்டதாகவும் பிறகு தீயணைப்பு படையினர் தன்னை காப்பாற்றினர் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பற்றி பிறகு தான் படிக்க தொடங்கியதாகவும் பிறகு திருக்குர்ஆனை படித்ததாகவும் ஒபிரைன் தெரிவித்தார். பிறகு இஸ்லாத்தைப் பற்றி விரிவாக படித்ததாகவும் அது பற்றி பலரிடம் விசாரித்த அறிந்ததாகவும் ஒபிரைன் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கேற்ப நடந்துக் கொள்ளவில்லை என்ற தெளிவை இஸ்லாத்தை நோக்கிய தனது பயணத்தின் போது அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். தனது முஸ்லிம் நண்பரான அஹ்மது அமீர் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவினார் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

ஒபிரைன் இஸ்லாத்தை தழுவி இந்த விபரம் திலாவரே நியூஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் முதலில் வெளியாகியது.

Wednesday, November 4, 2009

Send to whole world

The bellow photos are not a Movie Shooting or Celebrating a festival with crackers... its a school in Gaza .. this is the current situation of the innocent people in Gaza !

Make sure you read till last to know what is white phosphorus! and the effect!

( UNRWA SCHOOL IN BEIT LAHIA, GAZA , PALESTINE )

b781f7.jpe

b78207.jpe

b78216.jpe

b78226.jpe

b78235.jpe

b78245..jpe

b78255.jpe

Error! Filename not specified.

b78264.jpe

b78274.jpe

b78284.jpe

b78293.jpe

b782a3..jpe

b782b2.jpe

b782c2.jpe

b782d2.jpe

b782e1.jpe

b782f1.jpe

b78301.jpe

b78310.jpe

b78320.jpe

b7832f.jpe

b7833f.jpe

b7834f.jpe

b7835e.jpe

b7836e.jpe

b7837e.jpe

b7838d.jpe

b7839d.jpe

b783ac.jpe

b783bc.jpe

b783cc.jpe

b783db.jpe

b783eb.jpe

PLEASE PASS THIS MAIL .. LET THE WORLD KNOW

The joke is that Israel resently wants inquiry about Human Rights vialation by Sri Lankan govenment in the war against LTTE terrorists.

இடுப்பில் செல்போன் வைத்துக் கொள்பவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்து!

இடுப்பில் செல்போன் வைத்துக் கொள்பவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்து!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, November 2, 2009, 12:44

holsterசெல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது.

அப்போது இடுப்பில் பெல்ட்டில் செல்போன்களை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்தது.

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எலும்பு அடர்த்தியை குறைத்து உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்தையும் பலவீனமாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
150 பேரிடம் நடந்த சோதனையில் 122 பேர் எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த சோதனை நடந்தது.

Monday, July 27, 2009

இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்கா கும்பல் தலைவன் தலைமறைவு!




இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்க கும்பல் தலைவன் தலைமறைவு!
கடந்த 24-7-2009 அன்று இரவு 12 மணி அளவில் பேருவேளையில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலுக்குள் புகாரி தரீகாவை சேர்ந்த கும்பல் கொலைவெறியுடன் கூர்மையான வாழ்களுடன் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த சுமார் 20 பேரை வெட்டி தாக்கினர். இத்தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்தனர். மாஹிர், முஹம்மது ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’

தாக்கப்பட்டதில் நான்கு பேரின் நிலை மிகவும் கலலைகிடமாக உள்ளது.
பள்ளிவாசலுக்குள் நுழைந்த இக்கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி பள்ளிவாசலுக்கு தீ வைத்து குர்ஆன் பிரதிகளை கிழித்து பற்றவைத்துள்ளதுள்ளனர்.
பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள மதரஸா மற்றும் வைத்திய சாலைக்கும் தீ வைத்துள்ளனர். பள்ளிவாசல் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களும் இக்கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இக் கும்பலின் தாக்குதல்களை கொஞ்சமும் எதிர் பாராத அப்பாவி பொது மக்கள் பள்ளிவாசலிலிருந்து தப்பியோடி கழிவறைக்குள் புகுந்த போது அங்கேயும் சென்று அவர்களை வேட்டி சாய்த்தனர் இக்கயவர்கள்.கான்ங்கிரிட் தூண்களை எடுத்து தலையில் அடித்து தாக்கினர். வாலால், தலையிலும் நேற்றியிலும் கழுத்திலும் தாக்கினர். சம்பவ இடத்தில் இறந்து போன சகோதரரின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தது.
பள்ளிவாசல் உள்ளேயும் கழிவறையிலும் பள்ளியின் வெளிப்புறத்திலும் இரத்தம் உரைந்து கிடைந்தது.

கொலை வெறிபிடித்த தரீகா கும்பல் பள்ளிவாசலின் புனிதத்தை கெடுத்து நாசப்படுத்தினர்.
“லாஇலாஹ இல்லல்லாஹு ஷைகு நாயகம் வலியுல்லாஹ்” என கோஷமிட்டே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். காயப்ட்ட அப்பாவி மக்கள் கதறும் போது, “யா முஹியத்தீன் யா முஹியத்தீன்” எனக் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கு வந்த இக்கும்பல் வெள்ளை ஆடை அணிந்திருந்தனர். அனைவரின் கைகளிலும் வாட்கள் இருந்தன.
இத்தாக்குதலுக்கான முழு அங்கிகாரமும் திட்டமிடுதலும் புகாரி தரீகா ஷைகு நாயகம் அஹ்மத் பின் முஹம்மது வழங்கியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இத்தாகுதலில் தொடர்புடைய ஷைகு தலைமறைவாகி விட்டான்.
இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்திருந்தால் சேதங்களை; தடுக்கப்பட்ருக்கும் ஆனால் அவர்கள் உடனே வரவில்லை.
தாக்குதலில் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் போது, அவர நான்கு வயது குழந்தை ”எனது வாப்பாவை என்ன செய்கின்றீர்கள்’ என கூறியது போது ஜனாசாவில கலந்து கொண்டவர்கள் கண்கள் கலங்கின!
இவ்வளவு நடக்க காரணம் அந்த பள்ளியில் அல்லாஹ்விற்கு யாரையும் வைக்காதீர்கள் என்று கூறியது தான்.
தாக்கப்பட்ட மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜும்ஆப் பள்ளியில் நடந்த ஜும்மா உரையில் புகாரி கந்துரி என்ற பெயரில் நடந்த அனாச்சாரங்களைக் கண்டித்தும், அங்கு நடைபெற்ற ஓரிறைக் கொள்கைக்கு எதிரான இணைவைப்பான காரியங்களை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைக் கிளையின் பேச்சாளர் சகோதரர் ரியாஸ் (M.I.Sc) அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. இந்த உரையில் சகோதரர் ரியாஸ் பிரதானமாக கந்தூரி திருவிழாவில் கலந்துகொள்ளும் ஆண், பெண் இருபாலாரும் ஒட்டியுறவாடிக் கலந்துகொள்வதும், அதில் நடைபெறும் அசிங்கங்களும், மாற்றுமத நிகழ்வுகளைப் பின்பற்றும் அலங்கரிப்புகளும், அல்லாஹ் அல்லாதவர்களை உதவி தேடி அழைத்து அறுத்துப் பலியிடுதல் போன்ற காரியங்கள் இணைவைப்பானவையென்றும், அதை செய்பவர்கள் முஷ்ரிக்குகளென்றும் இதுகாலவரையில் இலங்கை வரலாற்றில் எந்த ஆலிமும் கூறாத அளவுக்குப் பகிரங்கமாக உடைத்துக் குறிப்பிட்டார்.

ஏகத்துவ பிரச்சாரத்திற்கு வாய் மூலம் பதில் சொல்ல தைரியம் துணிச்சல் இல்லாமல் அல்லாஹ்வின் இல்லத்தை எரித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த இத்தரீக்கா கும்பல், ஏக இறைவனான அல்லாஹ்வுடன் போர் புரிகின்றார்கள் என்பதை மறந்து விட்டார்கள்.
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் ஏக இறைவனை மறுப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
அல்குர்ஆன்-9:32
விடியோ காட்சி: